×

தமிழ்நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் பேருந்துகள் பழுதுபார்ப்பு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. 48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்த ஏப்.26-ல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7,682 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 652 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 7,030 பேருந்துகள் வரும் நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், புதிதாக 1,000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் பேருந்துகள் பழுதுபார்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,State Transport Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...